பதிவு செய்த நாள்
27
ஜூலை
2012
11:07
திருநெல்வேலி: ஆடி சுவாதி நட்சத்திரம் மற்றும் கருடஜெயந்தியை முன்னிட்டு நெல்லை திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் விஷேச திருமஞ்சனம், கருடசேவை நடந்தது. சுவாதி நட்சத்திரம், கருடஜெயந்தியை முன்னிட்டு பெருமாள் மூலவர், உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு குருவாயூரப்பன் கிருஷ்ணன் அலங்காரத்தில் மூலவருக்கு சந்தணக்காப்பு அலங்காரமும், சிறப்பு அர்ச்சனையும், தீபாராதனையும் நடந்தது. இரவு கருடவாகனத்தில் வெங்கடாஜலபதி பெருமாள் (உற்சவர்), ஸ்ரீதேவி, பூதேவி அம்பாளுடன் எழுந்தருளி கருடசேவை நடந்தது.