எஸ்.புதூர்: எஸ்.புதூர் அருகே கட்டுக்குடிப்பட்டியில் பூச்சொரிதலையொட்டி பேத்தப்பன் திருவிழா நடந்தது.
இங்குள்ள செல்வவிநாயகர், மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா 2 நாட்கள் நடந்தது. விழா நிறைவாக நேற்று மாலை 5:45 மணிக்கு பேத்தப்பன் திருவிழா நடந்தது. தலையில் கூடையைக் கிரீடமாக அணிந்து கோழி இறகுகளை சொருகிக்கொண்டு பேத்தப்பன் மகாராஜா வேடமணிந்தவரை கிராம மக்கள் அழைத்து வந்து சிறப்பு செய்தனர். தொடர்ந்து திருஷ்டி கழிக்கப்பட்டு கிராம இளைஞர்கள் பேத்தப்பனை விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டுக்குடிப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.