Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசு செலவில் கோவில்களில் யாகம்: ... திருத்தணி ஆடித் தெப்ப உற்சவம்: 205 பஸ்களை இயக்க முடிவு திருத்தணி ஆடித் தெப்ப உற்சவம்: 205 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை மற்றும் குருவாயூர் கோயில்களுக்கு ஹெலிகாப்டர் சேவை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2012
10:07

கொச்சி: கொச்சி விமான நிலையத்திலிருந்து, சபரிமலை மற்றும் குருவாயூருக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஹெலிகாப்டர் சேவை துவக்கப்பட உள்ளது. கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில், பிரசித்திபெற்ற அய்யப்பன் கோவிலுக்கு, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிடுவதால், விரைவாக தரிசனம் முடிந்து, திரும்ப முடிவதில்லை. அதேபோல், திருச்சூர் மாவட்டம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும் நிறைய பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களில் வசதி படைத்த பலரும் கொச்சி வரை விமானம் மூலம் வந்து, அங்கிருந்து காரில் குருவாயூரப்பனை வந்து தரிசித்து விட்டு, விரைவாக திரும்பி விடுகின்றனர். இதுபோன்ற பக்தர்களின் வசதிக்காக, கொச்சியில் இருந்து சபரிமலைக்கும், குருவாயூருக்கும் ஹெலிகாப்டர் சேவை நடத்த, டில்லியைச் சேர்ந்த சிப்சான் ஏவியேஷன் என்ற தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது.

இச்சேவையில், கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஒன்றரை மணிநேரத்திலும், குருவாயூருக்கு ஒரு மணிநேரத்திலும் சென்று தரிசித்து விட்டு வர முடியும். இதற்காக, சபரிமலையில் இருந்து 43 கி.மீ., தொலைவில், தற்காலிக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படுகிறது. அதேபோல், குருவாயூர் கோவிலில் இருந்து 4.5 கி.மீ., தொலைவில், தற்காலிக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும்.இவ்விரு தளங்களுக்கு சென்றடையும் பக்தர்கள், அங்கிருந்து கார் மூலம் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு திரும்பவும் ஹெலிகாப்டர் தளத்திற்கு கொண்டு வரப்படுவர். பின்னர் ஹெலிகாப்டரில் கொச்சி வந்தடைவர். இதற்காக, பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படும் யூரோகாப்டர் 350 பி3 என்ற ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும்.இதில், பைலட் உட்பட ஆறு பேர் பயணிக்க முடியும். ஒரு மணிநேரத்தில் 230 கி.மீ., வேகம் வரையிலும், இரண்டு மணி நேரம் வரை பயணிக்கலாம். இதில், பயணிக்க ஒரு மணிநேரத்திற்கு ஐந்து பேருக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணம். தனி நபருக்கு, 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் இருக்கும். இந்த ஹெலிகாப்டர் சேவை ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளது என, சிப்சான் ஏவியேஷன் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar