Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அத்திபட்டி மாரியம்மன் கோவில் ... திரவுபதி அம்மன் கோயில் கொடியேற்றம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரங்கநாதர் கோவிலுக்கு பயனில்லாத நந்தவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2022
07:05

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நந்தவனம், பராமரிக்காததால், முன் காடாக மாறியுள்ளது.

காரமடை அரங்கநாதர் கோவில், கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமாகும். இங்கு வார நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் கோவிலுக்கு வந்து, சுவாமியை வழிபட்டு செல்வது வழக்கம். தோலம்பாளையம் ரோட்டில் தெப்பக்குளம் அருகில், இக்கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் ஒன்றரை ஏக்கரில் உள்ளது. இங்கு வளர்க்கப்படும் பூச்செடிகளில் இருந்து, அறுவடை செய்யும் பூக்களை, கோவிலில் உள்ள சுவாமி சிலைகளுக்கு மாலையாக கட்டி போட்டு வந்தனர். அதேபோன்று கோவில் சார்பில் வழங்கப்படும் பசு மாடுகளுக்கு, நந்தவனத்தில் தீவன பயிர் பயிர் செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த நந்தவனத்தில் எவ்வித பூச்செடிகளும், தீவனப் பயிர்களை வளர்க்காததால், முள் செடிகளும், கொடிகளும் அதிக அளவில் வளர்ந்து, புதர் போல் காட்சியளிக்கிறது.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிணற்றில் தண்ணீர் நிறைந்துள்ளது. ஆனால் பூச்செடிகளை பயிர் செய்யாமல் உள்ளது. எனவே கோவில் நிர்வாக அதிகாரிகள் உடனடியாக நந்தவனத்தில் பூச்செடிகளும், பசு மாடுகளுக்கு தேவையான தீவனப் பயிர்களை பயிர் செய்ய வேண்டும் என கூறினர். காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் லோகநாதன் கூறுகையில்," நந்தவனத்தில் பூந்தோட்டம் அமைப்பது குறித்து, திட்ட மதிப்பீடு செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பூந்தோட்டம் அமைக்கப்படும்," என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar