பதிவு செய்த நாள்
28
ஜூலை
2012
10:07
ரமலான் மாதத்தில் தொழுகை மிக முக்கியமானது. எப்போது நீங்கள் தொழுதாலும் இந்த ஏழு வசனங்களைச் சொல்லுங்கள். குர்ஆனில் இது சொல்லப்பட்டுள்ளது.
*அளவிலா கருணையும் இணையிலா கிருபையும் கொண்ட அல்லாஹ்வின் திருப்பெயரால்
* எல்லாப்புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
* அவன் மாபெரும் கருணையாளனாகவும், தனிப்பெரும் கிருபையாளனாகவும்
இருக்கின்றான்.
* இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.
* உனக்கே நாங்கள் அடிபணிகிறோம்
( இபாதத் செய்கிறோம்). மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.
* எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக. (அவ்வழி)
எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்களின் வழி.
* உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.அல்லாஹ்வே தொழுகை குறித்து அருமையான கருத்துக்களை குர்ஆனில் சொல்கிறான்.
* திண்ணமாக, நான் அல்லாஹ், என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே எனக்கு அடிபணிவீராக. என்னை நினைவு
கூர்வது தொழுகையை நிலை நிறுத்தும்.
* உண்மையாகவே, குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை
கடமையாக்கப்பட்டுள்ளது.
* திண்ணமாக தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது.
பிறகென்ன! தொழுகையை அதிகப்படுத்த வேண்டியது தானே!
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26