கூடலூர்: கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோயில் வளாகத்தில் உள்ள மகாலட்சுமி அம்மனுக்கு, வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் விரதம் இருந்து வழிபட்டனர். மஞ்சள் கயறு, குங்குமம், வளையல் வழங்கப்பட்டது. விளக்கு பூஜை நடத்தி பெண்கள் பஜனை பாடல்கள் பாடினர். பொங்கல், கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. *கூடல் பாலசித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கும், அங்காள பரமேஸ்வரி கோயிலிலும் வரலட்சுமி விரத பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.