மயிலாடுதுறை: தருமபுரம் ஆதின குரு மூர்த்தங்களில் இருந்த, ஐந்து கலசங்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினத்தில் ஆதினகர்த்தர்களாக இருந்து மறைந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் குரு மூர்த்தம் எனும் நினைவிடம், திருமஞ்சன வீதியில் உள்ளது.இந்த குரு மூர்த்தத்தில் கடந்த 2ல், 20வது குரு மகாசன்னிதானத்திற்கு குருபூஜை நடந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை, குரு மூர்த்தம் விமானத்தில் இருந்த இரண்டு கலசங்கள், முகப்பு பகுதியில் உள்ள நுழைவாயிலின் மேல் பகுதியில் இருந்த கலசங்கள் என ஐந்து கலசங்கள் காணாமல் போயிருந்தன. செம்பு மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட அந்த ஐந்து கலசங்களின் மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய்.ஆதினம் மேலாளர் கோதண்டராமன். 64, மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.