பதிவு செய்த நாள்
07
மே
2022
05:05
பொன்னேரி: பொன்னேரியில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம், இன்று நடைபெறுகிறது.
பொன்னேரி, திருவேங்கிடாபுரம் பகுதியில் உள்ள திருவேங்கடமுடையான் திருக்கல்யாண குழு சார்பில், ஆண்டுதோறும் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடத்தப் படுகிறது. கொரோனா பெருந்தொற்றால், இரு ஆண்டுகளாக இவ்விழா நடத்தப்பவில்லை. இந்த ஆண்டு, சீனிவாச பெருமாள் - ஸ்ரீதேவி பூதேவி திருக்கல்யாணம் இன்று மாலை 5:00 மணிக்கு, திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசை கொண்டு வரும் நிகழ்வுடன் துவங்குகிறது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு மாலை மாற்றுதல், பூப்பந்து, சங்கல்பம், மாங்கல்ய பூஜை, ஓமம் வளர்த்தல் நிகழ்ச்சிகளும், இரவு, 8:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்கள் உரிய முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றும்படியும், விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.