சிங்கம்புணரி- சிங்கம்புணரி அருகே மாம்பட்டி தும்பைப்பட்டியில் மயில்ராயன்கோட்டை நாடு குலப் பண்பாட்டு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.மே 4 ல் யாகசாலை பூஜை தொடங்கி நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை கோயில் விமானம், மூலஸ்தானத்திற்கு கொண்டு சென்றனர். 10:00 மணிக்கு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தானத்தில் நாய்களை விரட்டும் மயில் சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் விழா குழு சார்பில் அன்னதானம் நடந்தது.