பதிவு செய்த நாள்
07
மே
2022
05:05
சூலூர்: சூலூர் சிவன் கோவில் திருப்பணி, நேற்று துவக்கி வைக்கப்பட்டது. சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில், சின்ன குளத்தை ஒட்டி உள்ள, ஸ்ரீ தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் பல நூறு ஆண்டுகள் பழமையானது.
கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், திருப்பணி செய்ய வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ஹிந்து அறநிலையத்துறை ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, கடந்த ஒரு மாதத்துக்கு முன் பாலாலய பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று திருப்பணிகள் துவக்க சிறப்பு பூஜைகள் நடந்தன. பேரூராதீனம் மருதாசல அடிகளார், கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுசாமி, சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் மன்னவன் திருப்பணியை துவக்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.