Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐஸ்வர்ய விநாயகர் கோயில் ... சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்டு மாரியம்மன் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2022
05:05

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள, தண்டு மாரியம்மன் கோவிலில், திருவிழா நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையம் பாரதி நகரில், மிகவும் பழமை வாய்ந்த தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த மாதம், 24ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் பூஜைகள் செய்து வருகின்றனர். இம்மாதம், 2ம் தேதி முனியப்பன் சுவாமிக்கு கிராம சாந்தி பூஜை செய்யப்பட்டது. மூன்றாம் தேதி அக்னி கம்பம் ஊர்வலமாக எடுத்து வந்து நட்டனர். வரும், பத்தாம் தேதி அம்மன் அழைப்பு, 11ம் தேதி சாந்திநகர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து, முளைப்பாரி மற்றும் மாவிளக்கு ஊர்வலமும், 12 ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், 13ம் தேதி மஞ்சள் நீராட்டு நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

சடைச்சி மாரியம்மன்: மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில், காப்பி ஒர்க்ஸ் அருகில் சடைச்சி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், 51ம் ஆண்டு திருவிழா மாதம், 2ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. மூன்றாம் தேதி கம்பம் நட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். நேற்று மாலை செல்வபுரம் விநாயகர் கோவிலில் இருந்து, பூவோடு கரகம், பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். எட்டாம் தேதி விளக்கு பூஜையும், சுமங்கலி பூஜையும் நடைபெற உள்ளது. பத்தாம் தேதி பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைத்து வருதலும், 11ம் தேதி பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தலும், 12ம் தேதி மஞ்சள் நீராட்டு மற்றும் மறு பூஜை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரியின் எட்டாவது நாள் வரும் அஷ்டமியை, ‘துர்காஷ்டமி’ என்கிறோம். துர்கா என்ற சொல்லுக்கு, கோட்டை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பல வருடங்களுக்கு முன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த ஒழுக்கோல்பட்டு கிராமத்தில், வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி, களிமண்குண்டு, தினைக்குளம், பெரியபட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar