அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி வயித்துமலை தில்லை சிவகாளி அம்மன் கோயில் அமுது படையல் மற்றும் வளையல் காப்பு விழா ஏப்., 29 துவங்கியது. பக்தர்கள் கிராம செல்வ விநாயகர் கோயிலில் இருந்து அலகு குத்தி, பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு 27 விதமான அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நாளை (மே 8) காலை 6:00 மணிக்கு குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு வளைகாப்பு விழா நடக்கும். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.