சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த சிவபுரி கிராமத்தில் அமைந்துள்ள வாழையடி புற்று மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
சிதம்பரம் அடுத்த சிவபுரி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வாழையடி புற்று மாரியம்மன் கோவில். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் இக்கோவிலில் நடைபெறும் தீமிதித் திருவிழா பிரசித்தம். இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த மாதம் 26ஆம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான தீ மிதி திருவிழா இன்று நடந்தது. விழாவையொட்டி காலை கரகம் எடுத்தல் மற்றும் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்வு நடந்தது. மாலையில் பெண்கள் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து 6 மணிக்கு மேல் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மேளதாளம் முழங்க சக்தி கரகம் ஊர்வலமாக புறப்பட்டு கோயிலுக்கு வந்தடைந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் சக்தி கழகத்துடன் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு தீபாராதனையும் பின்னர் வீதி உலாவும் நடந்தது.