சீதப்பட்டீஸ்வரர் கோயிலில் மூலவருக்கு 108 குட பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2022 07:05
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே சீதப்பட்டீஸ்வரர் கோவிலில் சித்திரை விழாவையொட்டி 108 பால் குட ஊர்வலம் நடந்தது.விழா கடந்த 4ம் தேதி காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு மூலவர் மற்றும் அம்பாள் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பேரொளி வழிபாடு நடந்தது.
10:00 மணிக்கு அகத்தியர் தேவார திரட்டு முற்றோதுதல் நடந்தது.நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு கோபூஜை மற்றும் திருப்பள்ளியெழுச்சி வழிபாடு நடந்தது. 7:30 மணியளவில் வீரசைவ சிவஞானிய சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் ஸ்ரீ ஞானம்பிகை அருள்நெறி மன்றம் சார்பில் சிவனடியார் சிவபூஜை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு பக்தர்கள் 108 பால் குடம் சுமந்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.