ஏரிப்பாக்கம் திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2022 07:05
புதுச்சேரி : ஏரிப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற, செங்குளத்து அய்யனார், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் வீதியுலா நடந்து வந்தது. நேற்றுமுன்தினம்மாலை தீமிதி திருவிழா நடந்தது.இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.