மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி பூஜை : சண்முகா அர்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2022 07:05
மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி பூஜையை முன்னிட்டு சண்முகா அர்ச்சனை நடந்தது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவில் சஷ்டியை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 11:00 மணிக்கு பாலாபிஷேகம், மகா தீபாராதனைக்குப் பின், மூலவர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காலை 11:00 மணிக்கு யாக சாலை பூஜை நடந்தது. பிற்பகல் 1:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.