திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2022 10:05
மயிலாடுதுறை: திருமணஞ்சேரி கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு கடந்த 6 ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, சுவாமி படி இறங்குதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி பின்னர் கல்யாணசுந்தரர் சுவாமிக்கு மங்கள ஸ்நானம் செய்யப்பட்டு, உற்சவ தினமான இன்று கல்யாணசுந்தரர் காசி யாத்திரைக்கு திருஎதிர்கொள்பாடி எழுந்தருளல், மாலை மாற்றுதல், ஊஞ்சல் வைபவம் ஆகியவை நடந்தது. கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி திருமணக்கோணத்தில் மணவறையில் எழுந்தருளி, பக்தர்கள் சீர்வரிசை எடுத்தவர, கோயில் தலைமை அர்ச்சகர் உமாபதி சிவாச்சாரியார் தலைமையிலான ஐயப்பன் சிவாச்சாரியார் பாலாஜி சிவாச்சாரியார் உள்ளிட்டோர் திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தார். திருக்கல்யாணத்தை முன்னிட்டு மூலவர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவி,தக்கார் இளையராஜா, கணக்கர் ராஜகோபால், ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். இரவு பஞ்சமூர்த்திகள் புஷ்ப பல்லக்கில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. வருகிற 12 ஆம் தேதி விடையாற்றியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.