ஜெர்மனி நாட்டில் ஹன்னோவர் எனுமிடத்தில் இந்திய, இலங்கை தமிழர்கள் சேர்ந்து ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அமைத்துள்ளனர். இதன் கும்பாபாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று பூர்ணாகுதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமான நிலையத்தை அடைந்தது. தொடர்ந்து மயிலாடுதுறை சிவபுரம் பாடசாலை நிறுவனர் ஏ.வி.சுவாமிநாத சிவாசாரியார் தலைமையில் ஜெர்மன் ஶ்ரீகுமார் குருக்கள் மற்றும் இந்திய இலங்கை சிவாசரியார்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யாகம் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். விழாவில் ஹனோவர் மேயர் தோமஸ் ஹிரைன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.