ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சைத்ரோத்ஸவ விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2022 10:05
திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சித்திரை சைத்ரோத்ஸவ விழா நேற்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இங்குள்ள பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ உற்ஸவத்தை முன்னிட்டு வரும் 18 வரை காலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு சர்வ மலர் அலங்காரத்துடன் பட்டாபிஷேக ராமர் சேவை சாதிக்கும் தொடர் நிகழ்வு நடக்கிறது.நேற்று காலை 10:00 மணிக்கு பட்டாபிஷேக ராமர் சன்னதி முன்புறம் உள்ள கொடிமரத்தில் ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.சீதா பிராட்டியார், ராமபிரான், லட்சுமணர், அனுமன் ஆகிய உற்ஸவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து. மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது.