பதிவு செய்த நாள்
08
மே
2022
10:05
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் திருமண மண்டபத்தை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.
ஒட்டன்சத்திரம் அருகே வல்லக்குண்டாபுரம் சுயம்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு கால்நடை டாக்டர் ராஜாமணி ஏழைகள் பயன்பெறும் வகையில் தமது சொந்த செலவில் திருமண மண்டபம் ஒன்றை காட்டியுள்ளார். இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மண்டபத்தை திறந்து வைத்தார்.
இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், பார்வையாளர் பழனிச்சாமி, இளைஞரணி தலைவர் வினோத்குமார், வர்த்தக அணி செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் ஆனந்தன், பழனி நகர தலைவர் ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ஆனந்தகுமார், செயற்குழு உறுப்பினர் மகேஷ், தொப்பம்பட்டி ஒன்றியம் புஷ்பத்தூர் ஊராட்சி தலைவர் செல்வராணி மகுடீஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் பழனிச்சாமி, அன்பழகன், நாட்டு துரை, கனகராஜ், ஒட்டன்சத்திரம் நகர தலைவர் சிவா மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கள்ளிமந்தையத்தில் அண்ணாமலைக்கு பா.ஜ., சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.