ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் திருக்கோயில் உப கோயிலான பாம்பனில் உள்ள தர்ம முனிஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
பாம்பன் குந்துகாலில் தர்மமுனீஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் 2021ல் ரூ.10 லட்சத்தில் திருப்பணிகள் துவக்கப்பட்டு, பணிகள் முடிந்தது. இதனையடுத்து ராமேஸ்வரம் திருக்கோயில் சார்பில் நேற்று முன்தினம் கோயில் வளாகம் முன்பு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று 2ம் கால யாகசாலை பூஜை முடிந்தவுடன் கோயில் குருக்கள் கலசத்தில் இருந்த புனித நீரை தர்ம முனிஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம் செய்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திருக்கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் பிரபாகரன், பேஸ்கார் கமலநாதன், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.