அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி வயித்துமலை அடிவாரத்தில் ஓம் சிவசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இங்குள்ள தில்லை சிவகாளி அம்மனுக்கு அமுது படையல் மற்றும் வளையல் காப்பு விழா நடந்தது. பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு 27 விதமான அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அம்மனுக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது. பல்வகை உணவுகள் வழங்கினர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.