பிரான்மலை கலியுக மெய் ஐயனார் கோவிலில் புரவி எடுப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2022 08:05
பிரான்மலை: பிரான்மலையில் புரவி எடுப்பு விழா நடந்தது. இங்குள்ள கலியுக மெய் ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாயொட்டி பிரான்மலை பாப்பாபட்டியில் உள்ள புரவி பொட்டலில் வைத்து இரண்டு புரவிகள் செய்யப்பட்டது. மே 7 ம் தேதி இரவு 7:00 மணிக்கு புரவி பொட்டலில் இருந்து ரத வீதிக்கு புரவிகள் ஊரவலமாக கொண்டுவரப்பட்டது. அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பொதுமக்கள் புரவிகளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். நேற்று மாலை 6:30 மணிக்கு ரத வீதியில் இருந்து கலியுக மெய் ஐயனார் கோயிலுக்கு மீண்டும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. கோயிலில் ஐயனாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு செய்யப்பட்டது.