பெருநாள் வருகிறதே! ஆடம்பரமாக ஆடை, அணிகலன் அணிய வேண்டுமே! பக்கத்து வீட்டார் உடைகள் எடுத்து விட்டார்களே! ஆகா... அதில் அந்த ஜமிக்கி வைத்த ஏழாயிரம் ரூபாய் புடவை என்னமாய் ஜொலிக்கிறது! அந்த பிராண்டு கம்பெனி பேன்ட் கிளாத்தை எனக்கும் தைத்தால் நன்றாக இருக்குமே! நான் மட்டும் இவற்றையெல்லாம் வாங்க முடியாமல் ஏழையாகப் பிறந்து விட்டேனே இப்படி எண்ணிக் கொண்டிருப்பவரா நீங்கள்! நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா! ""இஸ்லாத்தில் இணைந்து சொற்ப வருவாயில் நிம்மதியாக, திருப்தியாக வாழுகின்ற மனிதனை நான் வாழ்த்துகின்றேன். அல்லாஹ் கொடுத்த சொற்ப வருவாயை ஒருவன் திருப்தியோடு ஏற்பானாயின், அவன் செய்த சொற்ப செயல்பாடுகளையும் அல்லாஹ் திருப்தியோடு ஏற்றுக்கொள்கிறான். அல்லாஹ் ஒரு மனிதன் மீது விருப்பம் கொண்டால், அவனை பலவகையிலும் சோதனை செய்வான். அவன் அதனைச் சகித்துக்கொண்டால் திருப்தியோடு வாழ்ந்தால் அல்லாஹ் அவனை உண்மை முஸ்லிமாகத் தேர்ந்தெடுப்பான், என்கிறார்கள். குறைந்த வருவாயில் திருப்தியுடன் வாழ்ந்தாலும், அல்லாஹ் கொடுத்ததைத் திருப்தியுடன் ஏற்றுக்கொண்டாலும், தீயகாரியங்களைச் செய்யாமல் இருந்தாலும் கியாமநாளில் நரகம் அவரது கண்ணில் தென்படாது. இறைவனால் என்ன தரப்பட்டிருக்கிறதோ, அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அவரவர் தகுதிக்குத் தகுந்தாற்போல் ரம்ஜானைக் கொண்டாடத் தயாராகுங்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26.