Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனமது செம்மையானால்... சரஸ்வதியுடன் ராசி சக்கரம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நானிருக்க பயமேன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2022
09:05


அறியாமையில் உழலும் மக்களுக்கு வழிகாட்டவே மகான்கள் பிறக்கிறார்கள். அப்படிப்பட்ட அவதார புருஷர்தான் காஞ்சி மஹாபெரியவர். அவரது பக்தர்களில் ஒருவர் முனைவர் எஸ்.ஓ.ராமகிருஷ்ணன். சிதம்பரத்தில் இவர் இருந்த போது காஞ்சி மஹாபெரியவர் அங்கு முகாமிட்டிருந்தார். ‘ஆதிசங்கரரின் அத்வைதம்’ பற்றிய தன் ஆய்வுக் கட்டுரையை பெரியவரிடம் காட்டி ஆசி பெற வந்தார். ‘நிதானமாக முழுவதும் படித்து விட்டு தருகிறேன்’ என்றார் பெரியவர். அத்வைத தத்துவத்தில் மூழ்கித் திளைக்கும் துறவி, கட்டுரை முழுவதும் படிக்க விரும்புவதைக் கண்டு மகிழ்ந்தார்.
இதே போல வேறொரு சம்பவம் ஒன்றும் நடந்தது. 1974ல் ராமகிருஷ்ணனுக்கும், அவரது மேலதிகாரிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இது குறித்து மஹாபெரியவரிடம் முறையிட்டார்.
 ராமகிருஷ்ணன் எங்கு சென்றார், யாரை பார்த்தார், என்ன பேசினார் என்பதை எல்லாம் பார்த்தது போல விவரித்தார் பெரியவர். ஆச்சரியப்பட்ட ராமகிருஷ்ணன், அதிகாரியைத் திட்டுவார் என எதிர்பார்த்தார். ஆனால் அவரோ, ‘‘சவுக்கியமாக இருப்பாய் ராமகிருஷ்ணா. போய் வா’’ என பிரசாதம் கொடுத்தனுப்பினார். சில ஆண்டுக்குப்பின் அந்த அதிகாரி வலிய வந்து நட்புடன் பழகினார். ராமகிருஷ்ணனும் அதை ஏற்றதோடு, தவறு செய்தவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என மஹாபெரியவர் தனக்குள் இருந்து உணர்த்தியதாக தெரிவித்தார்.
  ஒருமுறை ராமகிருஷ்ணன் காஞ்சிபுரம் அருகிலுள்ள தேனம்பாக்கம் வந்திருந்தார். அப்போது பெரியவர் ஜபம் செய்து கொண்டிருந்ததால் காத்திருக்க நேர்ந்தது.  அப்போது ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான வீட்டில் அவர் குடியிருந்தார். இருட்டிய பின் செல்வதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் பெரியவரை தரிசிக்காமலேயே கிளம்பினார். ஆனால் மடத்தில் ஜபத்தை முடித்த பெரியவர் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு புறப்பட்டார்.  அரிக்கன் விளக்குடன் சீடர்களும் பின்தொடர்ந்தனர். காஞ்சி வரதராஜர் கோயில் மாடவீதி வந்தது. அந்த வழியாக போய்க் கொண்டிருந்த ராமகிருஷ்ணன் மகானை தரிசிக்கும் பேறு பெற்றார்.  இருட்டில் தனியாக நடந்தவருக்கு ‘நானிருக்க பயமேன்’ என மஹாபெரியவரின் ஆசி கிடைத்தது. மஹாபெரியவரைச் சரணடைந்தால் நமக்கும் நல்வாழ்வு கிடைக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar