பதிவு செய்த நாள்
09
மே
2022
12:05
செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் நடந்த திருத்தேர் உற்சவத்தில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 23ஆம் ஆண்டு மகா உற்சவம் மற்றும் 13ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த 2ம் தேதி துவங்கியது. அன்று காலை 7 மணிக்கு வினாயகர் பூஜை, கணபதி ஹோமம், செல்லியம்மன் பூங்கரகம் ஜோடித்து அழைத்து வருதல், சாகை வார்த்தலும், மாலை 7 மணிக்கு பூங்கரக வீதியுலாவும் நடந்தது. 3ம் தேதி அம்மச்சார் அம்மனுக்கு 108 சங்காபிஷேகமும், அம்மச்சார் அம்மன் கோவிலில் இருந்து பத்மினி தேவி மூர்த்தி தலைமையில் 1008 பால் குட ஊர்வலமும், செல்வ விநாயகர், அம்மச்சார் அம்மன், சீனுவாச பெருமாளுக்கு பால்குட அபிஷேகமும் நடந்தது.
4ம் தேதி பூதேவி, ஸ்ரீதேவி சமேத சீனிவாச பெருளாளுக்கு திருக்கல்யாண உற்வசம் நடந்தது. 6ம் தேதி இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 7 ம் தேதி இரவு 9 மணிக்கு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் பூபல்லக்கும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு விசேஷ ஹோமமும், அம்மச்சார் அம்மனுக்கு தங்க கவச அலங்காரமும் செய்தனர். 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மச்சர் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் ஊர்வலம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி, ஆரணி எம்.பி., டாக்டர் விஷ்ணுபிரசாத், மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், ஊராட்சி தலைவர் முருகன், விழாக்குழுவினர் நாராயணசாமி, கணேசன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு தொடர் அன்னதானம் நடந்தது.