Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் சுவாமி கோவில் அஷ்டபந்தன ... சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா துவக்கம் சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம் நெய்தலைக்காவு பகவதி அம்மன் வருகையால் பரவசம்
எழுத்தின் அளவு:
திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம் நெய்தலைக்காவு பகவதி அம்மன் வருகையால் பரவசம்

பதிவு செய்த நாள்

09 மே
2022
04:05

பாலக்காடு: பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் திருவிழா துவங்குகிறது. கேரளா திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பும் குடை மாற்றவும் வான வேடிக்கையும் மிகவும் பிரபலமானது. நேற்று இரவு மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நடந்தது. ஒத்திகை வானவேடிக்கை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர்.

இன்று காலை 8 மணி அளவில் நெய்தலைப் காவு பகவதி அம்மன் உருவச் சிலை குற்றூரில் இருந்து ஆடை ஆபரணங்கள் அணிந்த எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை மீது ஏறி வடக்கும் நாதன் சன்னிதி நோக்கி புறப்பட்டனர். செண்டை மேளத்துடன் அம்மன் வரும் வழித்தடத்தின் இருபுறமும் பக்தர்கள் அம்மனை தரிசிக்க திரண்டு வந்திருந்தனர். 11 மணியளவில் மணிகண்டனாலில் வந்தடைந்த அம்மன் கணபதி கோவில் அருகே நின்றதும் செண்டை மேளம் முழங்கத் தொடங்கின.

அதை மேளதாளத்துடன் மணிகண்டனாலின் இருந்து அம்மன் வடக்கும் நாதனின் ஸ்ரீமூலஸ்தானத்திற்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து 11.45 மணி அளவில் பகவதி அம்மன் வடக்குநாதர் கோவிலின் மேற்கு நடை வழியாக கோவிலுக்குள் வந்து தெற்கு கோபுர நடை வழியாக வெளியே வந்து மூன்று முறை தும்பிக்கையை உயர்த்தி திருச்சூர் பூரம் திருவிழா துவங்குவதாக அறிவிப்பதுடன் மூன்று நாள் கொண்ட திருவிழாவிற்கு ஆரம்பமாயின. நாளை (10ம் தேதி) காலை இதே கோபுர நடை வாயிலாக கணிமங்கலம் சாஸ்தா யானை மீது எழுந்தருளுவதுடன் பூரமத்தின் முக்கிய நாளின் நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பமாகும். திருவிழாவின் சிறப்பு அம்சமான யானைகளின் அணிவகுப்பும் குடை மாற்றவும் இன்று மாலை நடைபெறும். அதை தொடர்ந்து பிரம்மாண்ட வான வேடிக்கையும் நடைபெறும். முன்னதாக விழாவையொட்டி பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்தினர் போட்டிபோட்டு நடத்தும் யானைகளின் ஆடை ஆபரண அலங்காரப் பொருட்களின் கண்காட்சியான "யானை சமயம்" நேற்று துவங்கியது. இது இன்று நிறைவடைந்தது. இதை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மாசி மக தீர்த்தவாரியில், தந்தைக்கு, அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 ஆண்டுக்கு ஒருமுறை மகாமகமும், ஆண்டுக்கு ஒருமுறை ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா 10ம் நாளான இன்று காலை தேரோட்டம் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவிலில் இன்று (12ம் தேதி) குண்டம் திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் - மாசிமகத்தையொட்டி கும்பகோணம், சக்கரபாணி கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar