பதிவு செய்த நாள்
09
மே
2022
04:05
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் திருக்கோயில் பூச்சாட்டு திருவிழா துவங்கியது.
கடந்த, 3ம் தேதி பூச்சாட்டு விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் முனி சாட்டு விழா நடந்தது. இன்று கணபதி ஹோமம், காப்புக்கட்டுதல், அலங்கார பூஜை, கம்பம் நடுவிழா நடக்கிறது. இம்மாதம், 17ம் தேதி படைக்கலம், நகை எடுத்து வருதல், குதிரையின் மேல் அம்மன் அழைத்து வருதல், 18ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு சக்தி கரகமும், காலை, 10:00 மணிக்கு பொங்கல், மாவிளக்கு, அன்னதானமும், மதியம், 3:00 மணிக்கு செல்லுகுத்தி ஆடுதல், அக்னி கரகம் நடக்கிறது. 19ம் தேதி காலை, 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு, 7:00 மணிக்கு அலங்கார பூஜை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்தி மாரியம்மன் திருக்கோயில் நிர்வாக கமிட்டி குழுவினர் செய்து வருகின்றனர்.