தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் எப்போது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2022 04:05
சோழவந்தான்: சோழவந்தான் தென்கரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் சுவாமி, அம்மனுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கடந்த 2007ல் கும்பாபிஷேகம் நடந்தது.
ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்க வேண்டும், இதுவரை நடக்கவில்லை. கோயிலில் உள்ள சொர்ணபுஷ்கரணி புனித தெப்பத்தில் நீராடி வழிபட்டால் பல்வேறு பிரச்சினைகள் தீரும் என பக்தர்கள் நம்புகின்றனர். இத்தெப்பம் பராமரிப்பின்றி புதர் மண்டி, கற் சுவர்களில் மரங்கள் வளர்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் கோயில் முன்பாக பேவர் பிளாக் கற்கள் ஊராட்சி நிர்வாகத்தால் பதிக்கப்பட்டன. கோயில் நுழைவாயிலில் பதிக்காததால் மழைநீர் தேங்குகிறது. அறநிலையத் துறையினர் கோயிலை பராமரித்து கும்பாபிஷேக பணிகளை உடனே துவக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ் கண்ணன் : திருப்பணிக்கான மாநில வல்லுனர் குழு ஒப்புதலுக்கு சமர்ப்பித்துள்ளோம், கிடைத்ததும் மதிப்பீடு தயார் செய்து, ஆணையர் ஒப்புதல் பெற்று, உபயதாரர்கள் மூலம் பணிகள் துவங்கப்படும் என்றார்.