ஊட்டி: ஊட்டி காந்தள் மூவுலகரசியம்மன் கோவில் தேர்திருவிழா கோலாகலமாக நடந்தது.
மூவுலகரசி அம்மன் கோவிலில் தேர் திருவிழாவையொட்டி காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, லட்சுமி ஹோமம், துர்கை ஹோமம், நவசக்தி ஹோமம் நடந்தது. காலை, 8:30 மணிக்கு காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் இருந்து நவகலச தீர்த்தம் பால்குடங்களும் கொண்டு வரப்பட்டது. காலை, 10:00 மணிக்கு மஹா சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல், 12:30 மணிக்கு அம்மன் கோவில் உட்புறம் வலம் வருதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, 1:00 மணிக்கு உச்சிகால பூஜை மஹா தீபாராதனை, பிரசாத வினியோகம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு வீதிகளில் ஊர்வலம் வந்தது. வழி நெடுக மக்கள் பூஜை செய்து வழிப்பட்டனர்.