வாடிப்பட்டி: வாடிப்பட்டி சொக்கையா சுவாமிகள் மடத்தில் 83வது ஆண்டு குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி விநாயகர் வழிபாடு, கலச பூஜை, 108 சங்காபிஷேகத்தை தொடர்ந்து சுவாமிக்கு 16 வகை மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டது. வரதராஜ பண்டிட் விநாயகர், பாலதண்டாயுதபாணி, சுவாமிக்கு புஷ்ப அலங்கார அபிஷேகம் செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாக தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.