கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா : அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2022 05:05
கம்பம்: கம்பம் கவுமாரி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கம்பம் கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 19 ல் சாட்டுதல் செய்தும், ஏப், 20 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெற்றது. விதவிதமான அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்தார்.ஏப்ரல் 3, 4,5 தேதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும், ஆயிரம் கண் பானை மற்றும் உருண்டு.கொடுத்தல் ஆகிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். தொடர்ந்து கோவிலுக்கு முன்புறம் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அன்னதானம் கோயில் வளாகத்தில் நேற்று.காலை நடைபெற்றது. முன்னாள் அறங்காவலர் கே. ராமசாமி தேவர் நினைவாக கே.ஆர் ஜெயபாண்டியன் தலைமையில் அன்னதானம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சியை எம்,எல்.ஏ.,ராமகிருஷ்ணன் துவக்கிவைத்தார். நகராட்சி தலைவர் வனிதா, ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து திருவிழா மே 10 வரை நடைபெறுகிறது.