ஒடுப்பறை நாகரம்மன் கோயிலில் கொழுக்கட்டை படையல் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2022 10:05
நாகர்கோவில்: இரணியல் ஒடுப்பறை நாகரம்மன் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கொழுக்கட்டை வழிபாடு நேற்று நடைபெற்றது. சித்திரை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆயில்யம் நட்சத்திரம் தொடங்கி திங்கள் கீிழமை காலை வரை ஆயில்யம் நட்சத்திரம் இருந்தால் இக்கோயிலில் கொழுக்ட்டை வழிபாடு நடைபெறும். 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த நிகழ்வு வரும். இந்த ஆண்டு நேற்றும், நேற்று முன்தினமும் ஆயில்யம் வந்ததால் கொழுக்கட்டை வழிபாடு நடைபெற்றது. இந்த கோயிலை சேர்ந்த ஒரு சமூகத்தினர் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் கொழுக்கட்டை படைக்க வேண்டும். இந்த கொழுக்கட்டை ஆவியில் வேக வைக்காமல் பனை ஓலையில் கட்டி வைத்து தீயில் சுட்டு வேக வைப்பார்கள். ஒரு கொழுக்கட்டைக்கு 750 கிராம் அரிசி மாவு, 450 கிராம் சர்க்கரை, ஒரு தேங்காய், மட்டிப்பழம், தலா பத்து கிராம் ஏலக்காய், சுக்கு பயன்படுத்துவார்கள். நேற்று முன்தினம் இரவு தீயில் சுட்டு வேகவைக்கப்பட்ட கொழுக்கட்டைகள் நேற்று காலை நாகரம்மனுக்கு படைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.