தேவகோட்டை: தேவகோட்டையில், ஆதிபராசக்தி மன்ற 23 ம் ஆண்டு வேள்வி திருவிழா நடந்தது. சேவுகன் அண்ணாமலை கல்லூரி சிண்டிகேட் உறுப்பினர் சாந்தி கொடியேற்றினார். மன்ற தலைவி பெரியநாயகி முன்னிலை வகித்தார். டாக்டர் சுதா, எஸ்.ஐ., புவனேஸ்வரி துவக்கி வைத்தனர். நகர் சிவன்கோவிலில் இருந்து அக்னிச்சட்டி ஊர்வலம் நடந்தது. செயலாளர் வசந்தா, நகராட்சி தலைவர் சுமித்ரா பங்கேற்றனர். நேற்று காலை 9 மணிக்கு 5004 பெண்கள் கஞ்சி கலயங்களை ஏந்தி அம்மனை வழிபட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். தென் மண்டல பொறுப்பாளர் விண்மணி, பொருளாளர் கலா, பழனிச்சாமி எம்.எல்.ஏ., பங்கேற்றனர்.