புதுச்சேரி: வேதபுரீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர பாராயணம் நடந்தது. உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் வேதபுரீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர பாராயண நிகழ்ச்சி நடந்தது. சத்ய சாயி நிறுவனங்களின் தலைவர் நரசிம்மன் வரவேற்றார். காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை ருத்ர பாராயணம் நிகழ்ச்சி நடந்தது. பாலவிகாஸ் குழந்தைகள் பங்கேற்ற ருத்ர தத்துவம் நாடகம் நடந்தது. 12.45 மணிக்கு மகா மங்கள ஆரத்தி, மதியம் 1 மணிக்கு நாராயண சேவை நடந்தது.