எமனேஸ்வரம்: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா மே 15 ல் நடக்கிறது. அன்று காலை 10:00 மணி முதல் 11:00 மணிக்குள் பெருமாளுக்கு கும்ப திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து அன்று இரவு 3:00 மணிக்கு மேல் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்குகிறார். மே 16 அன்று காலை 10:00 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள் மதியம் 3:00 மணிக்கு திருச்சப்பரத்தில் அருள்பாலிப்பார்.
தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு பெருமாள் வண்டியூரில் சேர்க்கையாகி விசேஷ அபிஷேகங்கள் நடக்க உள்ளது. மறுநாள் சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் மற்றும் இரவு தசாவதார சேவை நடக்கிறது. தொடர்ந்து கருட மற்றும் அனுமன் வாகனங்களில் பெருமாள் அருள் பாலிப்பார். மே 20 அன்று இரவு பெருமாள் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் அலங்காரமாகி, மே 21 காலை கோயிலை அடைகிறார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபையினர் செய்துள்ளனர்.