திருக்கோஷ்டியூரில் பிரமோத்ஸவ விழா : மே 14 ல் சித்திரைத் தேர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2022 08:05
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவத்தை முன்னிட்டு மே 14 ல் சித்திரைத் தேரோட்டம் நடைபெறும்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மே 5ல் கொடியேற்றி பிரமோத்ஸவம் துவங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த உத்ஸவத்தில் தினசரி வாகனங்களில் சுவாமி திருவீதி உலா இரவில் நடைபெறுகிறது. ஏழாம் திருநாளை முன்னி்ட்டு நேற்று மாலை 5:00 மணி அளவில் பள்ளியறையில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருக்கு மஞ்சளால் சூர்ண பிரதிஷ்டை நடந்தது. தொடர்ந்து தங்கப்பல்லக்கில் தேவியருடன் பெருமாள் எழுந்தருளினார். பின்னர் கோயிலிலிருந்து புறப்பாடாகி மஞ்சள் வெயிலில் திருவீதியில் வலம் வந்தார். இன்று இரவு மகாராணி மண்டகப்படியை முன்னிட்டு குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. நாளை மாலை 4:57 மணிக்கு தேருக்கு தலையலங்காரம் துவங்கிறது. இரவில் அன்னவாகனத்தில் வீதி உலா நடைபெறும். மே14 காலையில் 8:00 மணிக்கு தேரில் சுவாமி எழுந்தருளலும், மாலை 5:00 மணி அளவில் தேர் வடம்பிடித்தலும் நடைபெறும். தொடர்ந்து மே15 ல் பிரணயகலம்,புஷ்பயாகம் வாசித்தல், மே 16ல் புஷ்பப்பல்லக்கும் நடைபெறும்.