திருமலையில் ஒரே நாளில் உண்டியல் வசூல் ரூ.2.30 கோடி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2012 10:07
நகரி: திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம், ஒரு நாள் வருமானமாக, 2.30 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. வெங்கடேச பெருமாள் கோவிலில், கடந்த சனியன்று காலை முதல் மாலை வரை, பக்தர்கள் உண்டியல் மூலம் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், ஒரே நாளில், 2.30 கோடி ரூபாய் வசூலானதாக தேவஸ்தான போர்டின் சேர்மன் பாபிராஜூ தெரிவித்தார்.