திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமியை முன்னிட்டு பால் சுவை கண்ட சிவபெருமான் கோயலில் சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து அலங்காரமானது. எஸ் ஆர் வி நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விளாச்சேரி ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் கோயிலில் சத்யநாராயண பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை முடிந்து அலங்காரத்தில் அருள்பாலித்தார்.