சோழவந்தான்: சோழவந்தான் அருகே கொடிமங்கலம் சீதாலட்சுமி அம்பாள் கோயிலில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள்,புஷ்ப வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.