முத்துமாரியம்மன் கோவில் திருவிழா : தேரில் பவனி வந்த அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2022 07:05
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு இன்று அலங்காரத் தேரில் பவனி வந்த முத்து மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.