ராமநாதபுரம் : ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த, பழமை வாய்ந்த குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாகபெருவிழா மே 7 முதல் 16 வரை நடந்தது.
விழாவை முன்னிட்டு,சுவாமிநாத சுவாமிக்கு தினமும் காலை அபிேஷக அலங்காரமும், மாலை உற்ஸவர் அலங்காரத்தில்யாகசாலை வழிபாடு நடந்தது. மே 13ல் சண்முகருக்கு யாகபூஜை செய்து அபிேஷக அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தீர்த்தவாரி அபிேஷகம், பால், பழங்கள்,பன்னீர், தயிர், தேன் உள்ளிட்ட பொருட்களில் உற்ஸவருக்கு அபிேஷகம் செய்தனர். வள்ளி, தெய்வானையுடன் மூலவர் சுவாமிநாத சுவாமி தங்ககவச அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00மணிக்கு உற்ஸவர் புஷ்ப பல்லக்கில் வெளிவீதியில் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்புகழ் சஷ்டி வழிபாட்டு குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.