Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் 18 படிகளுக்கு மேல் ... கோவிலுக்குள் செருப்பு அணிந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால பாண்டியர் நடுகல் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2022
05:05

திருச்சுழி: விருதுநகர் மாவட்டத்தில், முதல்முறையாக முற்கால பாண்டியர் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி அருகே இலுப்பையூரில், வரலாற்றுத் துறை பேராசிரியர் விஜயராகவன் தலைமையில், வரலாற்றுத்துறை மாணவர்களான ராஜபாண்டி, சரத்ராம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் கிபி 9, 10 ம், நூற்றாண்டைச் சேர்ந்த, முற்கால பாண்டியர்களின் நடுகல்லை கண்டறிந்தனர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, " இந்த கல்லானது 6 அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்டது. கல்லின் மேல் பகுதியில் 11 வரிகள் கொண்ட, வட்டெழுத்து கல்வெட்டாக காணப்படுகிறது. ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இயக்குனரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலருமான சாந்தலிங்கம் உதவியோடு படிக்கப்பட்டது. இந்த கல்வெட்டில் இடது பாதி முற்றிலும் சிதைந்து, வலது பாதியில் மட்டும் எழுத்துக்கள் காணப்படுகிறது. இரண்டு ஊர்களுக்கு இடையே ஏற்பட்ட பூசலில், புல்லன் சாத்தன் என்ற வீரர் ஒரு ஊரை வென்று, போரில் உயிர் நீத்தார், என்பதை கூறுகிறது. இதுவரையில், பாண்டியநாட்டில் கிபி 10 ம், நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து நடுகற்கள் 2 மட்டுமே, கிடைத்துள்ளன. அதில் ஒன்று தற்போது கண்டறியப்பட்ட இலுப்பையூர் கல்வெட்டாகும். மற்றொன்று, இதே ஊருக்கு தெற்கில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் நீராவிக்கு, அருகிலுள்ள கரிசல்குளம் என்னும் கிராமத்தில் உள்ள நடுகல் கண்டறியப்பட்டது. இந்த நடுகல் பசுக் கூட்டங்களைக் கவர்ந்து சென்றபோது, எதிர்த்து போரிட்டு, உயிர் நீத்த வீரனுக்கு நடப்பட்ட நடுகல் ஆகும். விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரையில் ராஜபாளையம் அருகில், முதுகுடியில், பிற்கால பாண்டியரின் நடுக்கல்லானது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த மாவட்டத்தில், எங்களது களப்பணியின் வாயிலாக, முதன்முறையாக, முற்காலப் பாண்டியர்களின் நடுக்கப் கண்டறியப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar