அன்னூர்: சொக்கம்பாளையத்தில், 200 ஆண்டுகள் பழமையான மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 3ம் தேதி நடக்கிறது. சொக்கம்பாளையத்தில் அரசமரத்தடி பிள்ளையார் கோவில் மற்றும் மாகாளியம்மன் கோவில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா வருகிற 1ம் தேதி விநாயகர் வழிபாடு உடன் துவங்குகிறது. அன்று திருவிளக்கு வழிபாடும், முதற்கால வேள்வி பூஜையும் நடக்கிறது. வரும் 2ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், எண் வகை மருந்து சாத்துதலும், மாலையில் மூன்றாம் கால பூஜையும், மலர் வழிபாடும் நடக்கிறது. வரும் 3ம் தேதி அதிகாலையில் நான்காம் கால வேள்வி பூஜையும், காலை 7:00 மணிக்கு, பிள்ளையார் மற்றும் மாகாளியம்மனுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.