பழநி: பழநி, இந்திராநகர் இட்ேடரி ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பழநி இந்திராநகர் இட்டேரி ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 8 முதல் மே 18 வரை நடைபெறுகிறது இதில் முக்கிய நிகழ்வாக ஏகாம்பரநாதருக்கும், காமாட்சி அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நேற்று காலை நடைபெற்றது. சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின் அன்னதானம் நடைபெற்றது பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.