வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2022 08:05
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ஏப்., 20ல் சித்திரை திருவிழா கம்பம் நடுதலுடன் துவங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.
கொரோனா பரவல் காரணமாக இரு ஆண்டுகளாக திருவிழா நடக்காததால் இந்த ஆண்டு அதிக அளவு பக்தர்கள் பங்கேற்றனர். மே 10ல் கோயில் வீட்டில் இருந்து அம்மன் புறப்பாடு நடந்தது. திருவிழாவில் பக்தர்கள் முல்லையாற்றில் நீராடி தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, பறவை காவடி, முளைப்பாரி, அலகு குத்தி, மாவிளக்கு, முடிகாணிக்கை உள்ளிட்ட நேர்த்திகடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். இரவில் முத்துப்பல்லக்கு, பூப்பல்லக்கில் மின்அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 13ல் துவங்கி மண்டகப்படிகளில் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மாலை தேர் நிலைக்கு வந்தது. இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் உலா வந்து தேர்த்தடம் பார்க்கும் நிகழ்வு நடந்தது. 8ம் நாளான நேற்று இரவு ஆபரணபெட்டிக்கு சிறப்பு பூஜை நடந்தது. திருவிழா நிறைவடைந்ததை அடுத்து இன்று காலை மஞ்சள் நீராட்டத்துடன் அம்மன் கோயில் விட்டிற்கு எழுந்தருள்கிறார்.