திருப்பரங்குன்றம்: தமிழகத்தில் தொடர்ந்து ஹிந்து மத கடவுள்கள், ஹிந்து மத பிரசாரங்களையும் இழிவாக பேசி வரும் தீய சக்திகளை சம்ஹாரம் செய்ய வேண்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அகில பாரத அனுமன் சேனா சார்பில் நான்கு அடி உயர பித்தளை வேல் காணிக்கையாக செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் ராமலிங்கம், கிருஷ்ணகுமாரி, பழனி, நாதன், சக்திவேல், ரவி, சித்தன் ஆகியோர் சொக்கநாதர் கோயிலில் பூஜை செய்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று கோயிலில் செலுத்தினர்.