நத்தம்: நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி இடையபட்டியில் கருப்பசாமி, வேட்டைக்காரன்சாமி புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
விழாவில் முன்னதாக 15 நாட்களுக்க முன் அழகர்மலை கன்னிமார் தீர்த்தம் எடுத்துவந்து, காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து கிராம தெய்வங்களுக்கு கனி வைத்தல், தோரண மரம் தூண்டுதல், கருப்பசாமி, வேட்டைக்காரன் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி எழுந்தருளல் நடந்தது. நேற்று மாலை தான் மேள தாளம் முழங்க வானவேடிக்கை மற்றும் தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி அழைத்து வருதல் நடந்தது. இன்று மே 18 சந்தன குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல் மற்றும் சாமி பூஞ்சோலை செல்லுதல் நிகழ்ச்சி நடக்கும். தொடர்ந்து நாளை கிடாய் வெட்டுதல் பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.