தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமயமாதா கோயிலில் நேற்று நற்செய்தி மற்றும் சமூகபணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா கோயில் திருவிழா கோலாகலமாக துவங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாள் மாலையிலும் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பொன்மகுடம் சூட்டப்பட்ட பனிமய அன்னையை வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி நடந்து வருகிறது. நான்காம் திருவிழாவான நேற்று காலை மறைமாவட்ட ஆசன ஆலய பங்கு இறைமக்கள், பள்ளிகள், திரேஸ்புரம் பங்கு இறைமக்கள், சலேசிய துறவிகள், கலை மனைகள், டி.சவேரியார்புரம் பங்கு இறைமக்கள், எப்.எம்.எம், எஸ்.ஆர்.ஏ அருட்சகோதரிகள் இறை அழைத்தலுக்காக சிறப்பு திருப்பலி, நற்செய்தி பணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி, சமூக பணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி, அனைத்து மகளிர் இயக்கங்களின் சார்பில் திருப்பலி நடந்தது. இதில் அதிகமான இறைமக்கள் பங்கேற்றனர். மாதா கோயில் பங்குதந்தை வில்லியம் சந்தானம் மற்றும் பங்குதந்தைகள், இறைமக்கள் கலந்து கொண்டனர். மாலையில் ஆலயம் இருக்கும் துறைமுக ரோட்டில் மக்கள் கூட்டம் பனிமய அன்னையை தரிசிக்க அலைமோதிக் கொண்டிருக்கிறது.