பதிவு செய்த நாள்
18
மே
2022
04:05
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காமராஜ் நகரில் பட்டத்தரசி அம்மன், மதுரைவீரன், கூப்பிடு விநாயகர், பாலமுருகன், விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் உற்சவ திருவிழா நடந்தது.
கடந்த, 3ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, தினசரி கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடந்தது. பால் கம்பம் போடுதல், அணிக்கூடை, சாமி நகை எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு சக்தி கரகம் அழைத்தல், பகல், 12:00 மணிக்கு அபிஷேக பூஜை, மதியம், 2:00 மணிக்கு மாவிளக்கு எடுத்து வருதல், 3:00 மணிக்கு அக்னி கரகம் அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நாளை காலை, 9:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல், பகல், 12:00 மணிக்கு மதுரைவீரன் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி, ஊர் பொதுமக்கள், மதுரைவீரன் மகளிர் குழுவினர் ஆகியோர் செய்து இருந்தனர்.